தாய்லாந்தின் பூகெட்டில் இருந்து புது டில்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் ஏற்பட்ட கடுமையான காற்றுக் கொந்தளிப்பில் சிக்கி சில விநாடிகளில் சுமார் 300 அடி கீழிறங்கியுள்ளது.
இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் 10 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானம் கடும் காற்று அலைகளில் சிக்கிய நிலையில் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
