மத்திய மலைநாட்டில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, நல்லதன்னிய – சிவனொளிபாதமலை வீதியின் அஹல கணுவ பகுதியில் மண்மேடு சரிந்து வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மலைநாட்டில் தொடரும் கடும் மழை காரணமாக சிவனொளிபாதமலை வீதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதை தடைப்பட்டுள்ளது.
வீதியில் சரிந்து விழுந்துள்ள மண் மற்றும் கழிவுகளை அகற்றி, பாதையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.
