இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தகவல்படி,ஒவ்வொரு நான்கு சர்வதேச சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட ஒருவர் இந்தியர் ஆவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 13 ஆம் திகதி,மொத்தம் 1,436,926 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்தடைந்துள்ளனர். இவர்களில் 358,608 இந்தியர்கள் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய இராச்சியம் 140,892 வருகைகளுடன் இரண்டாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து சீனா 94,890 மற்றும் ஜெர்மனி 83,965 வருகைகளுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
புதிய தரவுகளின்படி, ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தரும் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளாகவும் இந்தியர்களே காணப்படுவதாகவும் மாதத்தின் முதல் 13 நாட்களில் இலங்கையைப் பார்வையிட்ட 93,511 சுற்றுலாப் பயணிகளில் 20,378 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
