நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளின் போது 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டதோடு, 3,500 தரமற்ற தலைக்கவசங்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்ட இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்தத் தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்திய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, 3,500 தரமற்ற தலைக்கவசங்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்ட இரண்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் வீதிப் போக்குவரத்து விபத்துகள் காரணமாக 2,500 முதல் 2,700 வரையான நபர்கள் உயிரிழப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த உயிரிழப்புகளில் சுமார் 1,000 மரணங்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களினாலேயே ஏற்படுகின்றன எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
