Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

9 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றல்

ஆவணி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சுமார் ரூ.9 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான பீடி இலைகள் உள்ளிட்ட பொருட்கள் இலங்கை கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த 10ஆம் திகதி சிலாபம் – தட்சுறு ஓயா பாலத்திற்கு அருகில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கடல் வழியாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1,302 கிலோகிராமுக்கும் அதிகமான (ஈர எடை) பீடி இலைகள் மற்றும் 2 டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், 60 சோப்புக் கட்டிகள் அடங்கிய பெட்டியொன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மொத்த பெறுமதி ரூ.9 மில்லியனுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், சோப்புகள் மற்றும் இரண்டு டிங்கி படகுகள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கிரிபத்கொட/பியகம சுங்கத் திணைக்களத்தின் விசேட நடவடிக்கைப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் தொடர்ந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

கணக்கு இல்லாமலே WhatsApp அழைப்பு!

புரட்டாதி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக போலித்தகவலை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டவர் கைது!

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தம்பலகாமம் – சேனாவெளி குளத்தின் நீர் வெற்றியதால் அவதியுறும் விவசாயிகள்

ஆவணி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube