மஹியங்கனை, வியானா கால்வாயில் நீராடச் சென்ற 07 வயதுடைய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (20) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு காணாமல் போன சிறுவன் மஹியங்கனை – மாபாகடவெவ பகுதியைச் சேர்ந்த 07 வயதுடைய சிறுவனாவான்.
குறித்த சிறுவன் வீட்டுக்கு தெரியாமல் பிறிதொரு நபருடன் வியானா கால்வாயில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன சிறுவனைக் கண்டுபிடிப்பதற்காக மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
