Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் திருடப்பட்டு அடகுவைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் மீட்பு – மூவர் கைது

ஆவணி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பகுதியில் கடந்த 9ஆம் திகதி 17 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல்வேறு இடங்களில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

இதனையடுத்து, நேற்று (24) முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்த இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட நகைகளின் மொத்த எடை 43 பவுண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

தொழிற்சாலைக்குள் புகுந்து 4 பேரைத் தாக்கிய கரடி!

ஆனி 5, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

குருவிட்ட சிறைச்சாலை பதற்றம்: 4 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி!

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு கடற்பரப்பில் காயமடைந்த மீனவர் ஒருவர் கடற்படையினரால் மீட்பு!

வைகாசி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஓயாவில் தொடர் குடியிருப்பின் மீது லொரி ஒன்று மோதி விபத்து!

சித்திரை 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube