கொகரெல்ல – பாலுகடுமெட்டியாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலுகடுமெட்டியாவ பகுதியிலுள்ள வீடொன்றிற்கு அருகே நேற்று புதன்கிழமை (02) வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து கொகரெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
உயிரிழந்தவர் பாலுகடுமெட்டியாவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஆவார்.
உயிரிழந்த நபருக்கும் அவரது மகளின் கணவருக்கும் (மருமகன்) இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளதோடு, இதன்போது ஆத்திரமடைந்த மருமகன், வீட்டிலிருந்த கூரிய ஆயுதத்தால் மாமனாரைத் தாக்கிப் கொலை செய்துள்ளார்.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
