தாய்லாந்தில் இருந்து நாட்டிற்கு போதைப்பொருள் கடத்திய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 23 தேரர்களையும், தாமாக முன்வந்து துறவறத்தை கைவிடுமாறு மகா சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெல்லஸ்ஸ, பிந்தென்ன மற்றும் கிழக்கு மாகாணத்தின் பிரதம சங்கநாயக்கர் பதவியைப் பெற்ற மகாஓயா ஜினரதன தேரரை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
