“குஷ்”மற்றும் “ஹஷிஷ்” போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போது தாய்லாந்து பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ரூ. 50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியானது என தெரிவிக்கப்படுகிறது.
