அண்மைய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன்படி, பிரென்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 85.28 அமெரிக்க டொலராகவும், WTI ரக கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 80.14 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தம் முறிவடைந்து, கடந்த வாரம் மீண்டும் மோதல்கள் ஆரம்பமானதைத் தொடர்ந்து உலக எண்ணெய் சந்தையில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இடம்பெறும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள தாக்குதல்கள் காரணமாக விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக கடந்த செவ்வாய்க்கிழமையும் உலக எண்ணெய் விலை சுமார் 2 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
