1965 முதல் 1972 வரை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைவராகப் பணியாற்றிய சர் கார்பீல்ட் சோபர்ஸ், உலக கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர் என போற்றப்படுகிறார்.
அவரது மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), அதன் தலைவர் ஜெய் ஷா, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB), கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (Cricket West Indies) உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் அமைப்புகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.
பார்படோஸ் பிரதமர் மியா மொட்லி, சோபர்ஸின் மறைவை முன்னிட்டு நாட்டில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
சாதனைகள் மட்டுமின்றி, தனது அபார திறமை, விளையாட்டு பாணி மற்றும் சிறந்த ஆளுமையால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நிலையான இடம்பிடித்த சர் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவு, உலக கிரிக்கெட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
