இந்தியாவில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் காகிதத்திலான நாணயத்தாள்களுக்கு மாற்றாக, பிளாஸ்டிக் நாணயத்தாள்களை அறிமுகம் செய்வது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
முதற்கட்டமாக 10 மற்றும் 20 ரூபாய் நாணயத்தாள்களை பிளாஸ்டிக் தாள்களில் அச்சிட இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பிளாஸ்டிக் நாணயத்தாள்களில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் (Holograms, Transparent Windows) இணைக்கப்படுவதால், நாணயத்தாள்களை அச்சிடுவது மிகவும் கடினம்.
அதேவேளை காகித நாணயத்தாள்கள் அடிக்கடி கிழிந்து போவதால், அவற்றை மீண்டும் அச்சிடுவதற்கு அரசு ஆண்டுதோறும் பெரும் தொகையைச் செலவிடுகிறது. பிளாஸ்டிக் நாணயத்தாள்கள் நீண்ட காலம் புழக்கத்தில் இருப்பதால், மறுமுறை அச்சிடும் செலவு குறையும்.
இந்தச் சோதனை முயற்சிகள் வெற்றிபெற்றால், 2027-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பிளாஸ்டிக் நாணயத்தாள்கள் முழுவீச்சில் புழக்கத்திற்கு வர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அவுஸ்திரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியம் மற்றும் சிங்கப்பூர் உட்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகள் பிளாஸ்டிக் நாணயத்தாள்களைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
