போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளதுடன், தற்போதைய தலைமையின் தலையீடு இல்லையெனில் நாட்டின் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
“உங்கள் ஜனாதிபதி மிகவும் நேரடியாக செயல்படுகிறார். அவரது பாணி அனைவருக்கும் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் நேர்மையான மற்றும் நேரடியான தலைவர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சூழ்நிலைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காமல் இருக்க, அரசியல்வாதிகளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உலக அரசியலில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியிலும் பொதுமக்கள் அமைதியாக வாழும் சூழல் உருவாக வேண்டும் என்றும், அமெரிக்கா–ஈரான் மோதலை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டு, அரசியல் நெருக்கடிகளால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதியின் தலையீடு நாட்டின் நிலைத்தன்மைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் ஜெரோம் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
