தையிட்டி பகுதியில் சொந்த நிலத்தை இழந்து தவிக்கும் மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்
அந்தவகையில் நேற்றய தினமும் (29) தையிட்டி பகுதி மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் போது, “நாங்கள் சிங்கள பௌத்த மதத்திற்கோ அல்லது சிங்கள இனத்திற்கோ எதிரானவர்கள் அல்ல, அன்றைய ஆட்சியாளர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன உண்மை பௌத்தராக நடந்து கொண்டிருந்தால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது” எனத் தேசியத் தலைவர் பிரபாகரன் கூறியதை நினைவுகூர்ந்தார் நடராஜன் காண்டிபன்.
இன்று பௌத்த பேரினவாதத்தின் பெயரால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. தையிட்டி விகாரைக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் “வரலாற்று சிறப்பு மிக்க திஸ்ஸ ராஜமகா விகாரை காங்கேசன்துறை (கி.மு 236)” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. புனையப்பட்ட மகாவம்சக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, இத்தகைய போலி வரலாறுகளை முன்னிறுத்தி வடகிழக்கில் முறையற்ற ஆக்கிரமிப்புகள் தொடர்வது வேதனையானது
எங்கள் சொந்த நிலம் எமக்கு வேண்டும். வரலாற்று திரிப்புகளை நிறுத்து என கோரி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
