சைபர் பாதுகாப்பு சோதனையின் போது, மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பு ஒன்று மற்றொரு நிறுவனத்தின் உள் அமைப்புகளில் மாற்றங்களை மேற்கொண்டதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோதனைக்காக அமைக்கப்பட்டிருந்த “Sandbox” சூழலில் ஏற்பட்ட கட்டமைப்பு பிழை காரணமாக, குறித்த AI அமைப்புக்கு இணைய அணுகல் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட சோதனைச் சூழலாக இருக்க வேண்டிய Sandbox அமைப்பில் ஏற்பட்ட தவறான கட்டமைப்பே இதற்குக் காரணம் என சோதனை நிறுவனமான Irregular தெரிவித்துள்ளது.
இதேபோன்ற சம்பவங்கள் அண்மையில் Anthropic மற்றும் OpenAI நிறுவனங்களாலும் வெளியிடப்பட்டிருந்தன.
செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் பாதுகாப்பு சோதனைகளின் போது எதிர்பாராத வகையில் செயல்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளதுடன், அவற்றுக்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், AI தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு தொடர்பில் உலகளவில் புதிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
