2025 அக்டோபர் 10ஆம் திகதி அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தத்திற்குப் பின்னர் கடந்த சுமார் 300 நாட்களில் காஸாவில் குறைந்தது 300 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் சராசரியாக தினமும் ஒரு குழந்தை தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நல அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும், நூற்றுக்கணக்கான குழந்தைகள் காயமடைந்துள்ளதுடன், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, நோய்கள், பாதுகாப்பற்ற குடிநீர் மற்றும் மோசமான சுகாதார நிலைமைகளையும் எதிர்கொண்டு வருவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
அமைதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்புகள் தமது வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என யுனிசெப் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, 2023ஆம் ஆண்டு முதல் காஸாவில் இடம்பெற்ற போரில் 73,300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 58,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
