குருவிட்ட, பல்லன்சேன மற்றும் புதிய மெகசின் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை (10) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை நிர்வாகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அறிக்கையே இவ்வாறு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களுக்கான காரணங்கள் மற்றும் சம்பவங்களின் பின்னணி தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
