இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் மக்கள்மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தியும் ஹட்டன் நகரில் இன்று அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
”நாம் மலையகம்” அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மலையக சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்பல விடயங்கள் முன்நிறுத்தப்பட்டன..
மலையக மக்களுக்குச் சொந்தமான காணி உரிமை உடனடியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நீலகாமம் தோட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்.
தோட்டப் பகுதிகளுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் கூலிப்படைகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.போன்ற முக்கிய அம்சங்கள் கோரிக்கை கோசங்கள் ஆர்ப்பாட்டத்தின் குறிப்பிடப்பட்டன.
