இன்று (03) பிற்பகல் வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவான “கம்பன் விழா” நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். இதன் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு “கம்பன் புகழ்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிறந்த தமிழ் கவிஞரான கம்பரின் பெயரில் அகில இலங்கை கம்பன் கழகம் 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது.
இலக்கியம், நடனம் மற்றும் இசை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, இளைய தலைமுறையினரை கலாசார விழுமியங்கள் மற்றும் தேசப்பற்றுடன் கூடிய தர்மத்தின் வழியில் வழிநடத்துவதற்கு கம்பன் கழகம் ஆற்றிவரும் சேவையை ஜனாதிபதி பாராட்டினார். அத்துடன், இவ்விழாவில் கலந்து கொண்டதையிட்டு அவர் மகிழ்ச்சியடைந்தார்.
