நுவரெலியா – கிரகரி வாவியில் ஜெட் ஸ்கீ (Jet ski) படகில் பயணித்த போது நீரில் மூழ்கும் அபாயத்திலிருந்த இரண்டு சிறுவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று (16) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாவியில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையின் உடனடி விரைவு மீட்புக் பிரிவினர், படகு கவிழ்ந்ததைக் கண்டு உடனடியாகச் செயற்பட்டு சிறுவர்களை மீட்டுள்ளனர்.
மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 13 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் நுவரெலியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
