மாகாண சபைத் தேர்தலை சாத்தியமான விரைவான காலத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்திருந்த கூற்று குறித்து அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர், தேர்தலுக்கான நிதியை அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாகத் தெளிவுபடுத்தினார்.
நாடாளுமன்றம் தேவையான சட்டங்களை இயற்றி, எல்லை நிர்ணய செயல்முறையை இந்த ஆண்டுக்குள் பூர்த்தி செய்தால் தேர்தலை நடத்த முடியும் என அவர் விளக்கமளித்தார்.
சட்டக் கட்டமைப்பு இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது என்பதால், நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
