வட்டவளை குயில்வத்தை பகுதியில் விறகு வெட்டுவதற்காக மரத்தில் ஏறிய இரு பாடசாலை மாணவர்கள், அதிஉயர் மின்சாரக் கம்பிகள் உரசியதில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகினர்.
12 மற்றும் 13 வயதுடைய குறித்த மாணவர்கள் அலறியதைத் தொடர்ந்து, அப்பகுதி தொழிலாளர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உடனடியாகச் செயற்பட்ட வட்டவளை பொலிஸார், மின்சார அதிகாரிகளின் உதவியுடன் அப்பகுதிக்கான மின்சார விநியோகத்தைத் துண்டித்து, இரு மாணவர்களையும் மீட்டு வட்டவளை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சம்பவத்தில் ஒரு மாணவர் தீக்காயங்களுக்கும், மற்றைய மாணவர் கடும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
