களனி ஆற்றில் நீராடச் சென்று நீரில் மூழ்கி மாயமான இளைஞரின் சடலத்தை கண்டெடுப்பதற்கான தேடுதல் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) 2ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று சனிக்கிழமை (29) முல்லேரியா, பொக்குணுகொட பகுதியில் வைத்து களனி ஆற்றில் நீராடச் சென்றபோதே குறித்த இளைஞர் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
இவ்வாறு நீரில் மூழ்கி மாயமானவர் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லேரியா பொலிஸார் மற்றும் பொலிஸ் கடற்படைப் பிரிவின் உயிர்காப்பு பிரிவினர் இணைந்து சனிக்கிழமை முதல் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், இதுவரை குறித்த இளைஞரின் சடலத்தை கண்டெடுக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
