குருந்தூர் விகாரையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்து மீளழைத்தமை தொல்பொருட்கள், தொல்பொருள் காப்பகம் மற்றும் வனப் பாதுகாப்புப் பகுதி என்பன கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன . ஆகவே பொலிஸ் உத்தியோகத்தர்களை மீண்டும் பாதுகாப்புக்கு அமர்த்துமாறு குருந்தூர் விகாரை விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரர்,புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
குருந்தூர் விகாரை வளாகத்தில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்காக தங்கியிருந்ததுடன், தொல்பொருள் பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் பணியையும் அவர்கள் மேற்கொண்டு வந்தனர்.
இவ்வாறான பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்து மீளழைத்தமை தொல்பொருட்கள், தொல்பொருள் காப்பகம் மற்றும் வனப் பாதுகாப்புப் பகுதி என்பன கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
அவ்வப்போது இவ்வாறான இடங்களுக்கு பல்வேறு குழுக்கள் பல்வேறு போராட்டங்கள் போன்றவற்றுக்காக வருகை தந்தபோதிலும்,அவற்றைத் தடுப்பதற்கான சிவில் பாதுகாப்பு அதிகாரம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே உள்ளது.
எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்து மீளழைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை மீண்டும் சேவைக்கு அமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
