தேயிலை பறித்துக் கொண்டிருந்த 17 தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (31) காலை இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் – வனராஜ தோட்டத்தின் மேல் பகுதியில் உள்ள 7வது தேயிலைத் தோட்டத்தில், ஒரு மரம் மற்றும் பாறையில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூட்டிற்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்தபோதே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
புகையை உருவாக்கி குளவி கொட்டுக்கு இலக்காகியவர்களை காப்பாற்ற முயன்றபோதிலும், புகையை உருவாக்கிய குழுவையும் குளவிகள் தாக்கியுள்ளதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
