சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஆர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நீலம் மற்றும் வெள்ளை நிற ஜெர்சியில் இருபது ஆண்டுகள் விளையாடியதன் மூலம், ஆர்ஜென்டினா அணிக்கான தனது நீண்ட காலப் பயணத்திற்கு அவர் இறுதி அத்தியாயம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் தனது விளையாட்டு வாழ்க்கையின் பெரும்பகுதியை வரையறுத்த அந்த தேசிய ஜெர்சியை இனி அணியப் போவதில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த முடிவை எடுப்பதில் தனது தந்தையின் மரணம் ஒரு முக்கியப் பங்கு வகித்ததாக இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
முன்பதாக இந்த மாத தொடக்கத்தில் தமது தந்தை காலமானதை அடுத்து, விளையாட்டிலிருந்து விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாக மெஸ்ஸி சூசகமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
