சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி இன்று (10) முதல் விசேட புகையிரத சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த விசேட புகையிரத சேவைகள் இன்று (10) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.
இதன்படி,
கொழும்பு கோட்டை – அனுராதபுரம்,
அனுராதபுரம் – காங்கேசன்துறை,
மருதானை – மாத்தறை,
மருதானை – பெலியத்த
ஆகிய ரயில் பாதைகளினூடாக இந்த விசேட புகையிரதங்கள் இயக்கப்படவுள்ளன
இதேவேளை பெலியத்தவிலிருந்து மஹவ வரை வழக்கமாக பயணிக்கும் ‘ரஜரட்ட ரஜினி’ புகையிரத சேவை புத்தாண்டு காலத்தில் அனுராதபுரம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை பயணிக்கும் அலுவலக புகையிரதம் , நாளை (11) மற்றும் நாளை மறுதினம் (12) மாத்திரம் அனுராதபுரம் வரை இயக்கப்படும்.
பொதுமக்கள் கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்வதற்கும், மீண்டும் கொழும்பு திரும்புவதற்கும் ஏதுவாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புகையிரதங்களுக்கு மேலதிகமாக, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சேவைகளும் விசேடமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
