துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் ‘கொண்ட ரஞ்சித்’ என அழைக்கப்படும் ரஞ்சித் குமார், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாரின் தகவலின்படி, துபாயிலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட அவரை, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
