Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நான் உயிருடன் இருக்கும்வரை தனி ஈழ கோரிக்கையை முன்வைக்கமாட்டேன் – அர்ச்சுனா

புரட்டாதி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

தனக்கு “கருநாக்கு” (சொல் பலிக்கும் வாக்கு) இருப்பதாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் முன்னர் கூறிய பல அரசியல் கணிப்புகள் உண்மையாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

அந்தவகையில், எதிர்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டாலும் அல்லது என்ன தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவதைத் தடுக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்த நாட்டிற்கு ஒரே ஒரு ஜனாதிபதியை மட்டும் பெயரிட முடியும் என்றால், அது இன்றோ, நாளையோ, என்றைக்கோ அது நமது மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பாகப் பேசிய அவர், மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியானது மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினரை ஆட்சியில் அமர்த்துவதற்கான களத்தையே தயார் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.

தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் தீர்வு காண்பதற்கு, வடக்கையும் தெற்கையும் இணைக்கும் தலைவராக நாமல் ராஜபக்ஷவே திகழ்வார் என்றும், அவருக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தான் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழக் கோரிக்கையை முன்வைக்கப்போவதில்லை என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

மேலும், தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் பயணத்தைத் தடுப்பதற்காக தன் மீது 29 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், தற்போதைய ஆட்சிமுறைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு கோட்டையில் தடம்புரண்ட ரயில்

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட 10,000 தங்கப்பொருட்களின் எடையிடல் நிறைவு

ஆனி 16, 2026
இலங்கை

புத்தூரில் தமிழ் இராணுவ சிப்பாய்க்கு ரூ.15 இலட்சத்தில் புதிய வீடு

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube