ஹோமாகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவக் குழுவினர் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில், மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவபுத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவக் குழு ஒன்று சம்பந்தப்பட்ட விழா மண்டபத்திற்கு வந்து அங்கு விருந்துபசாரம் ஒன்றை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது மாணவர்கள் மது அருந்திய நிலையில் , இரு குழுக்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதாகவும், இதில் தாக்கப்பட்ட மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் குருநாகல், வெல்லவ, நிகடலுபொத்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். அவர் ஹோமாகமவின் பிட்டிபான பகுதியில் உள்ள மாணவர் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர் என்று கூறப்படுகிறது.
இந்த விருந்தில் கலந்துகொண்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஹோமாகம தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
