நாட்டில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன்17ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கடந்த ஆண்டுகளைப் போன்று இந்த ஆண்டும் “தேசிய வெற்றி தினம்” இன்று நடைபெற உள்ளது.
இந்தக் கொண்டாட்டம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பத்தரமுல்லவில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தின் முன்பாக நடைபெறும் என ரணவிரு சேவா அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களின் உறவினர்கள் முதன்முறையாக இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி. கொஹோனா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம், தேசிய மாணவர் படை, ரணவிரு சேவா அதிகாரசபை மற்றும் போர் வீரர்களின் பெற்றோர், உறவினர்கள், சிறப்பு விருந்தினர்கள் உட்பட 2,769 பேர் இதில் பங்கேற்க உள்ளனர்.
