தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான உள்நுழையும் பாதைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில வீதிகள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.
ஆகவே பயணிகள் 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் வானூர்தி நிலையங்களுக்கு வருகை தருமாறும், முடிந்தவரை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் தாமதங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த விசேட அறிவித்தல் வானூர்தி நிலைய பொறுப்பதிகாரியினால் விடுக்கப்பட்டுள்ளது.
