வெலிமடை, டயரபா பெருந்தோட்டப் பகுதியில் தொழிலாளர் ஒருவர், தோட்ட உதவி அதிகாரி ஒருவரினால் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வெலிமடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பெருந்தோட்டப் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற சிறிய வாக்குவாதம் ஒன்றின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குறித்தத் தொழிலாளியால் தாமும் தாக்கப்பட்டதாகக் கூறி தோட்ட அதிகாரியும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக வெலிமடைபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
