களுவாஞ்சிகுடி கடலில் சனிக்கிழமை (23) இரவு சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நேற்று (24) முறைப்பாடு செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் சம்பவ தினமான சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக சென்றுள்ளார். அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை ஆகியும் வீடு திரும்பவில்லை
இதனையடுத்து இந்த கடற்பகுதிக்கு படகில் மீனவர்கள் சென்று தேடிய போது மீனவரான விஜயகாந்த் சென்ற படகை கண்டுபிடித்த போதிலும் அந்த இளைஞர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
