Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

கொங்கோ, உகண்டாவில் தீவிரமடையும் எபோலா பரவல்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

WHO| Ebola epidemic |efforts| quicktamilnews

வைகாசி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகண்டாவில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை விடவும், அதன் பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

இந்த தொற்றினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்பிரிக்க ஒன்றியம் (African Union) நடத்திய இணையவழி மாநாட்டில் உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசுஸ் (Tedros Adhanom Ghebreyesus) பின்வரும் விபரங்களை வெளியிட்டுள்ளார்.

எபோலா தொற்றாளர்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தற்போது நிலைமையைக் கையாள்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நிலைமை சீரடைவதற்கு முன்னர் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது.

கொங்கோவின் அண்டை நாடுகள் இந்தத் தொற்றுப் பரவல் காரணமாக அதிக ஆபத்துள்ள மண்டலங்களாகக் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவை உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உகண்டாவில் மேலும் இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

கொங்கோவின் இத்தூரி (Ituri) மற்றும் வடக்கு கிவு (North Kivu) மாகாணங்களில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் மற்றும் இந்தத் தீவிர ‘Bundibugyo’ வைரஸ் வகைக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இதுவரை இல்லாதிருப்பது தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

நிலைமைகளை நேரில் ஆராய்வதற்காக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதானோம் மற்றும் அவசர சுகாதாரப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி சிக்வே இஹேக்வாசு (Chikwe Ihekweazu) ஆகியோர் செவ்வாய்க்கிழமை காங்கோவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

சர்வதேச அளவில் கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசரநிலையாக (PHEIC) இந்த எபோலா பரவலை உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிரை காவும் நுளம்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வைகாசி 7, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

விராட் கோலி புதிய உலக சாதனை!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ, பிரியங்கர ஜயரத்னவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

களுத்துறை மாவட்டத்தில் 70 விளையாட்டு கழகங்களுக்கு 50 ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

வைகாசி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube