தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சூரியவெவ நுழைவாயில் அருகே, நேற்று வியாழக்கிழமை (28) இரவு ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த மூன்று பேர் எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் இருந்த பாதுகாப்பு வேலியின் மீது டிப்பர் ரக லொரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிப்பர் ரக லொரியின் பின்னால் கொங்கிரீட் கலவையை ஏற்றிவந்த வாகனமானது , டிப்பர் ரக லொரியின் பின்பக்கத்தில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.
