நீர் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும், கட்டணங்கள் எதுவும் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நீர்வழங்கல் ஊழியர் சங்கத்தின் 19 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் தூய குடிநீர் விநியோகத்தில் புதிய மறுமலர்ச்சி ஏற்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
