Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்!

police|quicktamilnews

ஆனி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மீகொடை பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய, தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

ஹைலெவல் வீதியின் மீகொடை சந்திக்கு அருகில், கெப் ரக வாகனத்தை ஓட்டிவந்த சாரதி ஒருவர், தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் 06 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 07 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மீகொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டு, ஜூன் 01ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும், விபத்து நடந்த நேரத்தில் சாரதியுடன் மேலும் மூன்று நபர்கள் வாகனத்தில் பயணித்துள்ளதாகவும், சாரதி கைது செய்யப்படும்போது அந்த மூவரும் கெப் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பியோடி உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்வதற்காக 02 பொலிஸ் விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களை அடையாளம் காண்பதற்கே பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

01வது சந்தேகநபரின் விபரங்கள்: 

பெயர்: அத்தநாயக்ககே தொன் வசந்த 

முகவரி: இல. 243/டி, குடமாதுவ, சித்தமுல்ல, பிலியந்தல (இவர் கெப் வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் ஆவார்) 

02வது சந்தேகநபரின் விபரங்கள்: 

பெயர்: எஸ்.கே. குமார என்ற செல்லமுத்து செல்லக்குமார் 

முகவரி: இல. 342/டி, பெலன்வத்த, பன்னிபிட்டிய 

03வது சந்தேகநபரின் விபரங்கள்: 

பெயர்: தொன் சரத் ஹெட்டிகே 

முகவரி: இல. 337/07, பெலன்வத்த, பன்னிபிட்டிய 

எனவே, குறித்த சந்தேகநபர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

நிலையப் பொறுப்பதிகாரி (OIC) – மீகொடை பொலிஸ் நிலையம்: 071-8592179

போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி – மீகொடை பொலிஸ் நிலையம்: 077-9494188

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை ஏற்றுமதி வருமானம் 4 மாதங்களில் 5.7 பில்லியன் டொலர்களாக உயர்வு!

வைகாசி 26, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

சென்னை கோயம்பேட்டில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றி கொலை…

வைகாசி 31, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சர்வதேச நாடுகளுக்கான விமானசேவையை மீள ஆரம்பித்தது குவைத்!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் 4 குற்றவாளிகளினதும் மரணதண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube