இந்திய வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய மூன்று தாக்குதல்களில், மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, கப்பல்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்காவை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 13ஆம் திகதியன்று ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த கப்பல்களை முற்றுகையிட்டது.
இந்த முற்றுகையின் கீழ் இதுவரை அமெரிக்கப் படைகள் 8 கப்பல்களைச் செயலிழக்கச் செய்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்ட கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளன.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கருத்துரைத்துள்ளார்.
தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் விரைவில் திரும்புவதற்கு ஏதுவாக, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர முயற்சிகளுக்கு இந்தியா அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (11) வியாழக்கிழமை நடந்த ஒரு தாக்குதல் உட்பட, இந்த வாரத்தில் மட்டும் இந்திய மாலுமிகளைக் கொண்ட மூன்று கப்பல்களை அமெரிக்க கடற்படை தாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
