சீதுவை , ததுகம் ஓயாவில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ததுகம் ஓயாவில் சடலமொன்று மிதப்பதாக நேற்று வெள்ளிக்கிழமை (12) சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், அவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவர் 5 அடி 5 அங்குலம் உயரமுடையவர் எனவும், வெளிர் சாம்பல் நிற அரைக்கைச் சட்டையும் மற்றும் பழுப்பு நிற நீளக் காற்சட்டையும் அணிந்துள்ளார் எனவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
