“மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின்” 20ஆவது ஆண்டு எழுச்சி விழா நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் மன்றத்தின் தலைவர் ஏ.எஸ். ஞானம் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது.

மன்றத்தின் 20 ஆண்டுகால கல்வி மற்றும் சமூகச் சேவையைப் பாராட்டி, இலங்கை முத்திரைத் திணைக்களத்தினால் விசேட நினைவு முத்திரை கொழும்பு மாநகர மேயர் விராய் கெய்லி பல்தசாரால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மேலும் மன்றத்தின் 20ஆவது ஆண்டு நினைவு மலரினை அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

