கலிபோர்னியா, மொஜாவே பாலைவனத்தில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட விமானப்படையின் பி-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
அணு மற்றும் வழக்கமான குண்டுகளைச் சுமந்து செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட எட்டு என்ஜின்கள் கொண்ட போர் விமானம், ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமானத்தில் பயணித்த அரச பணியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் இராணுவத்தினர் என , விமானத்தில் இருந்த 08 பேரும் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
