அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உடன்படிக்கையானது இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு “மிகவும் மோசமானது” என்று ஐநாவுக்கான இஸ்ரேல் தூதுவர் டேனி டனோன் (Danny Danon) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் ‘செனல் 14’ (Channel 14) ஊடகத்திற்கு வழங்கிய கருத்துக்களிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை செயல்முறையை முடிந்தவரை விரைவாக முடிக்க முயற்சிப்பதன் மூலம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தனது நிலையை “மேம்படுத்திக்கொள்ள” அனுமதித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுவரையில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கான ஒரு கட்டமைப்பு (Framework) மட்டுமே தற்போது எட்டப்பட்டுள்ளது.
