எம்பிலிபிட்டிய – மித்தெனிய வீதி மற்றும் ஹுலந்துவ பாலம் ஆகியவற்றை அண்டிய பகுதிகளுக்கு இன்று (19) வெள்ளிக்கிழமை 13 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
எம்பிலிபிட்டிய நீர் வழங்கல் திட்டத்திற்கு அமைவாக, ஹுலந்துவ பாலத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய நீர் குழாய் பதித்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, இன்று காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான 13 மணித்தியாலங்கள் இந்த நீர் விநியோக தடை அமுலில் இருக்கும்.
இந்த நீர் விநியோகத் தடை காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் சபை வருத்தம் தெரிவிப்பதோடு, பொதுமக்கள் தமக்குத் தேவையான நீரினை முன்கூட்டியே சேமித்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
