அஸ்வசும (Aswasuma) நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கான ஜூன் மாத கொடுப்பனவுகள் இன்று (23) முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 270,025 குடும்பங்கள் இதன் மூலம் பயனடையவுள்ளதுடன், 3 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை இதற்காக விடுவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் எவ்வித தடையுமின்றி இன்று முதல் தங்களது அஸ்வசும கணக்குகளில் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
