அரச ஊழியர்களுக்காக கட்டணத் திட்டத்தின் கீழ் 20 கிலோ அரிசி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக கேக்குள் அரிசி மற்றும் நாட்டு அரிசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி வழங்கும் யோசனை உள்ளது. விவசாய அமைச்சகத்தின் மூலம் இது முன்வைக்கப்பட்டுள்ளது. சற்று குறைந்த விலையில் 20 கிலோ அரிசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 10 கிலோ வீதம் இரண்டு பாக்கெட்களாக கேக்குள் மற்றும் நாட்டு அரிசி வழங்கப்படும். தவணை முறையில் வழங்கப்படும். வவுச்சர் வழங்கப்படும். இதனை சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்களில் பெற முடியும். விவசாயிகளின் அரிசியை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். அரசு கொள்முதல் செய்யும் நெல்லை அரிசியாக மாற்றி விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
