சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (27) இரவு ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவல்கல பகுதியில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையணியின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 135 லீற்றர் (180 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்தை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ஹொரணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மூனகம, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
