இலங்கையின் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றான 79வது ஹீனதியான பெரஹேரா நேற்று(27) நடைபெற்றது.
உயிருள்ள விலங்குகளின் அழகு, பாரம்பரியத்திற்கு செலுத்தப்பட்ட மரியாதை மற்றும் கலாச்சாரப் பெருமிதம் ஆகியவற்றை பிரதிபலித்த இந்த பெரஹேரா, வண்ணமயமான ஊர்வலம், கம்பீரமான யானைகள், விலங்குகளின் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலாச்சார அம்சங்களால் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.
