சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இரு வேறு ஹெலிகொப்டர் விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் மொத்தமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சவுதி அரசிற்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்திற்குரிய ஹெலிகொப்டர் ஒன்று ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் பிரான்சின் வடகிழக்கு பகுதியிலுள்ள டொப்லென் நகரில் இடம்பெற்ற ஹெலிகொபடர் விப்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் பாடசாலையொன்றிற்கு சொந்தமனா இந்த ஹெலிகொப்டர் விபத்தில் விமானி உயிரிழந்துள்ளதுடன் ஐந்து மாணவர்கள் மற்றும் , ஐந்து பயிற்றுவிப்பாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
